தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் செய்முறை தேர்வு – பள்ளிகளில் குழு ஆய்வு!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் மார்ச் 1ம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. இதனால் செய்முறை தேர்வு நடத்துவதற்கான அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிகளின் பட்டியல் தயார் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது மேலும் பள்ளிகளில் ஆய்வக வசதிகள் இருப்பதை உறுதி செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வு
தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை பொதுத்தேர்வு 20 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அத்துடன் 10 மதிப்பெண்கள் அகமதிப்பீடு வழங்கப்படும். இதையடுத்து தற்போது 12ம் வகுப்பு மாணவர்களின் அகமதிப்பீடு மதிப்பெண்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் – ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவு!.. அச்சத்தில் மக்கள்!
இதில் ஏதேனும் பிழை ஏற்பட்டால் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த கல்வியாண்டில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுதுவதற்கு 2 வாரத்திற்கு முன்பாக செய்முறை தேர்வு நடத்தபப்ட்டது. ஆனால் நடப்பு கல்வியாண்டில் 10,11,12ம் வகுப்பு என அனைத்து மாணவர்களும் செய்முறை பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் ஆய்வக வசதியுடன் கூடிய பள்ளிகள் அதிகம் தேவைப்படுகின்றனர்.
அதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வக வசதி கொண்ட பள்ளிகள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பித்த பள்ளிகளில் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் அடுத்த வாரத்திற்குள் செய்முறை தேர்வு நடத்துவதற்கான பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும். இந்த பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.