தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம் – ஊரடங்கு தளர்வுகள்!
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் குறைந்து வரும் காரணத்தால் 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை (ஜூலை 1) முதல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள்:
தமிழகத்தில் கடந்த 2 வார காலத்திற்கும் மேலாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த ஜூன் 21ம் தேதி அன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசின் வழிகாட்டுதல் படி 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் – கேள்வி!
தொடக்கத்தில் 4 மாவட்டங்களுக்கு மட்டுமே பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதால் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்க சிக்கல் ஏற்பட்டது. இதனை அடுத்து தமிழக அரசு கடந்த 28ம் தேதி முதல் கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள மாவட்டங்களில் பொது போக்குவரத்து இயங்க அனுமதி வழங்கியது. இதனால் தமிழகத்தில் கடந்த 28ம் தேதி முதல் வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து போக்குவரத்து இயங்க தொடங்கியது.
கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி – முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் தற்போது 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஆம்னி பேருந்துகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து நாளை (ஜூலை 1) முதல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களுக்கான காலாண்டு வரியை ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.