தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் – கேள்வி!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை என முன்னாள் முதல்வர் கூறுவது குறித்து அரசு ஊழியர்கள் சங்கம் அதிமுக.,வுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அப்போதைய அதிமுக அரசு ரத்து செய்து 2003ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் 2000ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது எனவும் அவர்கள் பணி காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை அரசு ஊழியர்கள் முற்றிலும் எதிர்த்தனர். இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.
கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி – முதல்வர் உத்தரவு!
அதன் பிறகு அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த அம்மா அவர்கள் ஓய்வூதிய திட்டம் பற்றி ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்தார். மேலும் 2016 ல் நடைபெற்ற தேர்தலிலும் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்தார். ஆனால் ரத்து செய்யப்படவில்லை. 2018ம் ஆண்டு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் அளித்தது.
தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகள் திறக்க அனுமதி – அரசிடம் கோரிக்கை!
ஆனால் அவர் அந்த அறிக்கையை வெளியிடவில்லை. மேலும் அது குறித்து எந்த கலந்தலோசனைகளையும் மேற்கொள்ளவில்லை. தற்போது முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் திமுக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவில்லை என கூறுவது மிக வேடிக்கையாக உள்ளது என அரசு ஊழியர் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தற்போதைய திமுக அரசு, அரசு ஊழியர்களின் நலன் கருதி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.