இந்தியாவில் தீவிரமடையும் ஓமைக்ரான் நோய்த்தொற்று பரவல் – கேரளாவில் 9 பேருக்கு பாதிப்பு!
ஓமைக்ரான் தொற்று கேரள மாநிலத்தில் அதிகமாக பரவி வந்தது. இந்நிலையில் இன்று கேரளாவில் மேலும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
ஓமைக்ரான் பாதிப்பு:
உலகில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்றும் முடியாத பட்சத்தில் புதிய வைரஸான ஓமைக்ரான் தொற்று நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று பரவாமல் இருந்த நிலையில் தற்போது அனைத்து மாநிலத்திலும் பரவி வருகிறது. தெலுங்கானா, கர்நாடகாவில் பரவி வந்த ஓமைக்ரான் தொற்று கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி கேரளாவில் கண்டறியப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் 82 பேருக்கு ஓமைக்ரான் தொற்று – சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு! பொதுமக்கள் அச்சம்!
ஓமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள வெளிநாடுகளில் இருந்து கேரளா வருவோர்க்கு கண்டிப்பான முறையில் RT-PCR பரிசோதனை எடுக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கண்டிப்பா 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. அரசின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வெளியூரிலிருந்து கேரளா வரும் மக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு – புத்தாண்டு, கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்களுக்கு தடை!
கேரளாவில் ஏற்கனவே 16 பேர் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 9 பேருக்கு இன்று தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு RT-PCR டெஸ்ட் எடுக்க பட்டது. அப்பரிசோதனையில் அவர்களுக்கு ஓமைக்ரான் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதுவரை கேரள மாநிலத்தில் 24 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரள மாநில அரசு ஓமைக்ரான் பரவலை தடுக்க ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.