தமிழகத்தில் 82 பேருக்கு ஓமைக்ரான் தொற்று – சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு! பொதுமக்கள் அச்சம்!
தமிழகத்தில் இதுவரை ஓமைக்ரான் தொற்றின் அதிக அபாயம் மற்றும் குறைந்த் அபாயம் என்று பட்டியலிடப்பட்ட வெளிநாடுகளில் இருந்து வந்த 82 பேருக்கு இதுவரை ஓமைக்ரான் தொற்றின் அறிகுறி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
ஓமைக்ரான் தொற்று:
தென் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்றின் மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் வகை வைரஸ் மிகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடியதாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனால் ஓமைக்ரான் தொற்றின் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், உலக சுகாதார அமைப்பு அதிக அபாயம் உள்ள நாடுகள் மற்றும் குறைந்த அபாயம் உள்ள நாடுகள் என்று பட்டியலிட்டுள்ளது. இங்கிருந்து வரும் பயணிகள் அனைவரும் தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தான் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு – புத்தாண்டு, கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்களுக்கு தடை!
அப்போது வரும் டிசம்பர் 26ம் தேதியான ஞாயிறன்று 16வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடக்க உள்ளது. தமிழகத்தில் 2ம் டோஸ் தடுப்பூசியை இதுவரை 93 லட்சம் பேர் செலுத்தவில்லை. 60வது வயதை கடந்த முதியவர்கள் தான் இதில் அதிகம் உள்ளனர். இதனால் முதியவர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதுவரை தமிழகத்தில் 669 பேர் டெங்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி 600 பேர் என்ற எண்ணிக்கையில் தான் உள்ளது. ஆனால் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் பொங்கல் பரிசாக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அரசின் திட்டம்!
தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் என்று 104 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 82 பேருக்கு எஸ் ஜீன் டிராப் எனப்படும் ஓமைக்ரான் தொற்றின் முதல் அறிகுறி உள்ளது. இவர்களின் மாதிரிகள் பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று மாலை அல்லது நாளைக்குள் முடிவுகள் வெளியாகும். இதுவரை 13 பேரில் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் 1 ஓமைக்ரான் என்றும், மீதம் 8 பேருக்கு டெல்டா வகை தொற்று என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் பண்டிகை காலத்தில் மக்கள் அனைவரும் முறையான கொரோனா தடுப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.