ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு – புத்தாண்டு, கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்களுக்கு தடை!
டெல்லியில் ஓமைக்ரான் தொற்று அதிகம் உள்ளதால் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொண்டாட்டங்களுக்கு தடை:
கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்குகளில் சற்று தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். கொரோனா தடுப்பூசிகளின் 2 டோஸ்களையும் மக்கள் அச்சமில்லாமல் போட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணிதல், பொது இடங்களில் கூட்டம் போடாமல் இருப்பது போன்ற நடைமுறைகளை மறந்து விட்டனர். இதன் விளைவாக ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா தொற்று உருவெடுத்துள்ளது. கொரோனா வைரஸை விட 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது ஒமைக்ரான்.
தமிழகத்தில் 2022 பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – பயணிகள் கவனத்திற்கு!
இந்தியாவில் அதிக அளவில் 217 பேருக்கு ஓமைக்ரான் பரவி வருகிறது. கொரோனா பரவல் கணக்கெடுப்பு பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளது. டெல்லியில் மொத்தம் 54 பேருக்கு தொற்று பரவியுள்ளது. புத்தாண்டு (2022) மற்றும் கிறிஸ்துமஸ் தினம் வர இருக்க நிலையில் மக்கள் பண்டிகையை கொண்டாட மிகுந்த ஆர்வமாக உள்ளார்கள். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புத்தாடைகள், கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் வாங்குவதற்கு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் போடுகின்றனர்.
தமிழகத்தில் பொங்கல் பரிசாக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அரசின் திட்டம்!
டெல்லியில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாடும் வகையில் கலாச்சார நிகழ்வுகள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், பணியிடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அனுமதிக்க கூடாது என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.