மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!
நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் அவ்வப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலான நிலையில் தற்போது கோவாவிலும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
அரசு ஊழியர்களுக்கு பதவி, சம்பள உயர்வு, ஓய்வூதியம் முதலான பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டிற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதே போல பல மாநிலங்களிலும் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என பல பாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் ஹாப்பி நியூஸ்!
இதனால் புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து பல மாதங்கள் ஆகியும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரவில்லை. இதனால் அவ்வப்போது அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும்படி கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் கூடிய விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாக வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது. இந்நிலையில் ஐந்தாவது மாநிலமாக கோவாவிலும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது. கிட்டத்தட்ட 17 வருடங்களாக அரசு ஊழியர்கள் இந்த அறிவிப்பிற்காக காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், திடீரென பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியதால் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.