தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் ஹாப்பி நியூஸ்!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் ஹாப்பி நியூஸ்!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதனால் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

கோடை விடுமுறை நீட்டிப்பு:

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு நடைபெறாமல் புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கிடப்பட்டு மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற்றனர். இருப்பினும் நடப்பு ஆண்டு கண்டிப்பாக பொதுத்தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை உறுதி அளித்தது. அதன் பேரில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் அதிகரித்து வரும் வெப்ப அலை மற்றும் அக்னி வெயில் காரணமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வு நாளில் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆதாருடன் இணைப்பு! முழு விபரங்கள் இதோ!

இந்த அறிவிப்பின்படி, மாணவர்களும் தேர்வுக்கு மட்டும் பள்ளிக்கு வந்தனர். மேலும் 1- 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு முழு ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து, கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 14 ஆம் தேதி புதிய கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என்று, பள்ளிக் கல்வித்துறை முன்னதாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் நேற்று, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் புதிய ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் ஜூன் மாதம் 20 ஆம் தேதி திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

Exams Daily Mobile App Download

இது ஒரு வாரம் முன்னதாகவோ, பின்னராகவோ இருக்கலாம் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு அரசு 38 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் தற்போது 10300 க்கு மேற்பட்ட பள்ளி கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா வருகைக்கு பின், அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 53 லட்சமாக உயர்ந்து உள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!