தினசரி ரூ.750/- ஊதியத்தில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை!
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Warden பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.எனவே ஆர்வமுள்ளவர்கள் 27/01/2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ஆயில் இந்தியா லிமிடெட் |
பணியின் பெயர் | Warden |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவன காலிப்பணியிடங்கள்:
நர்சிங் பள்ளிக்கான Warden பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Warden கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வருடம் விடுதியில் வார்டனாகப் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங்/கேட்டரிங் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
ஆயில் இந்தியா சம்பள விவரம்:
நாள் ஒன்றுக்கு ரூ.750/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதாவது மாதம் ஒன்றுக்கு ரூ.19,500 சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் விவரங்கள்:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27.01.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.