ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒரு நாளைக்கு ரூ.750/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Pharmacist மற்றும் Paramedical Hospital Technician பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.03.2023 மற்றும் 17.03.2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ஆயில் இந்தியா லிமிடெட் |
பணியின் பெயர் | Pharmacist மற்றும் Paramedical Hospital Technician |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.03.2023 & 17.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
ஆயில் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:
- Pharmacist – 05 பணியிடங்கள்
- Paramedical Hospital Technician – 05 பணியிடங்கள்
OIL வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.15,000/-
Pharmacist கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியல் பாடத்தில் 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்திய அரசு மற்றும் இந்திய பார்மசி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து பார்மசியில் 02 (இரண்டு) வருட டிப்ளோமா படிப்பு முடித்திருக்க வேண்டும்.
Paramedical Hospital Technician கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியல் பாடத்தில் 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும்அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனம்/மருத்துவக் கல்லூரியில் OT தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (02 ஆண்டு படிப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
- Pharmacist – ரூ.19,500 (ஒரு நாளைக்கு ரூ.750/-)
- Paramedical Hospital Technician – ரூ.16,640/- (ஒரு நாளைக்கு ரூ.640/-)
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களின் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேர்காணலில் கொண்டு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.