பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 15 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ஆரம்பம்!

0
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஜூன் 15 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ஆரம்பம்!
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஜூன் 15 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ஆரம்பம்!
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 15 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ஆரம்பம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜூன் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும், பள்ளிகளுக்கு 100 சதவீத மாணவர்களும் வருகை தரவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா பரவலின் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு காலம் தாழ்த்தி தான் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. மேலும், இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு தான் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வு எழுத உள்ளதால் மாணவர்கள் பதட்ட நிலையில் தான் தேர்வு எழுத சென்றனர். மாணவர்களின் சிரமத்தை குறைக்க 35% வரைக்கும் பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் அமல் – ஜூன் 16 உண்ணாவிரதப் போராட்டம்!

பள்ளி மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இரண்டு ஆண்டுகளும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டதால் மாணவர்களின் கல்வித் திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இழந்த கல்வித் திறனை மீட்டெடுக்க இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு கடுமையான பயிற்சி கொடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், சில பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக கற்றல் திறன் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 13ஆம் தேதி முதல் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 15ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. நூறு சதவீத மாணவர்களும் பள்ளிக்கு வருகை தரவேண்டும் என பள்ளி கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலும் தற்போது அதிகரித்து வருவதால் பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் பராமரிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், இலவச பாடத்திட்டங்கள், சைக்கிள்கள், மதிய உணவு முதலான சில நலத்திட்டங்கள் குறித்தான ஆலோசனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!