தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து? உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் ஆசிரியர், மாணவர், பணியாளர் ஆகியோர்களின் பாதுகாப்பிற்காக 10 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது
சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை:
தமிழகத்தில் இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் 3ம் அலையின் துவக்கமாக கொரோனா தொற்று அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், கோவாவில் வரும் ஜனவரி 26ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜன.16 வரை மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் அடிப்படையில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில், சுகாதாரத்துறை ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 16ம் தேதி வரை விடுமுறை விட உள்ளதாக முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.
TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!
இந்த வகையில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா 3வது அலை அதிகரித்து வருவதால் 10 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை நிறுத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணையில் ஆன்லைன் வகுப்புகள் சிறந்தது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளால் ஆசிரியர், மாணவர், பணியாளர் ஆகியோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.