தமிழகத்தில் ஜன.16 வரை மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் ஜன.16 வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் ஜன.16 வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் ஜன.16 வரை மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌:

கடந்த நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு மழை பெய்ய தொடங்கியது. சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இடைவிடாது பெய்த தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை புகுந்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை நீர் வீடுகளில் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்படைய செய்தது. அதன் பிறகு கடந்த டிசம்பர் மாதம் மழை குறைய தொடங்கியது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் இன்றைய வானிலை தகவலை வெளியிட்டுள்ளது.

12.01.2022: கடலோர மாவட்டங்கள்‌ அதனை ஒட்டியுள்ள உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

13.01.2022: கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

14.01.2022: கடலோர மாவட்டங்கள்‌ அதனை ஓட்டியுள்ள உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

15.01.2022,16.01.2022: கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

ஜனவரி 18 முதல் ஊரடங்கு உத்தரவு அமல், புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கும்‌.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

12.01.2022: தென்‌கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!