TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 120 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்காக 2020ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டிஆர்பி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்தது மாணவர்களின் நலன் கருதி கடந்த செப்டம்பர் மாதம் முதல் கட்டமாக 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கடந்த நவம்பர் மாதம் முதல் தொடக்க மற்றும் நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. 2021 – 2022ம் கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஏற்கனவே கொரோனா தாக்கம் காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஏதும் நடைபெறவில்லை.
தமிழகத்தில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜன.27 கடைசி நாள்!
தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை எழுந்து வருகிறது. இதனடிப்படையில் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. மேலும் தேர்வுக்கான விண்ணப்ப பதிவும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் வட்டார கல்வி அதிகாரிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு 120 வட்டார கல்வி அதிகாரிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை முக்கிய ஆலோசனை!
120 பணியிடங்களுக்காக கணினி வழியில் நடத்தப்பட்ட தகுதித்தேர்வை 43,000 பேர் தேர்வு எழுதினர். அதன் தொடர்ச்சியாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்களின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் ஆன்லைன் வழி சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 19, 20ம் தேதிகளில் நடைபெறும். ஜனவரி 21 அன்று தேர்வானவர்களின் இறுதி பட்டியல் வெளியாகும். இது குறித்த கூடுதல் விபரங்களை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.