தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழகம் முழுவதும் தற்போது அனைத்து வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடந்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்துறை உத்தரவு:
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு சமீப காலமாக தான் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதற்கு முன்னதாக மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் கொரோனா கால ஊரடங்கு நேரத்தில் ஆன்லைன் முறையில் தான் நடத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் அதிக அளவில் மொபைல் போன்களை பயன்படுத்தும் நிலை இருந்து வந்தது. அது தவிர்க்கப்பட முடியாத நிலை தான் இருந்தது. பாடங்களை நடத்துவது, குறிப்பிட்ட பகுதிகளுக்கு வீடியோ மூலம் பாடம் அனுப்புவது, அலகுத்தேர்வுகளை நடத்துவது அனைத்தும் மொபைல் வழியாக தான் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் முறையில் பாடங்ககளை படித்து வருவது அவர்களுக்கு கற்றல் இழப்புகளை அதிகப்படுத்தும் எனவும்,கற்றல் திறன் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கல்வியாளர்கள் எச்சரித்து வந்தனர். தற்போது மீண்டும் நேரடியாக வகுப்புகள் நடத்தப்படுவதால் மொபைல் பயன்பாடு இனி தேவையற்றது. இதனால் தமிழக கல்வித்துறை புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? பெற்றோர்கள் கோரிக்கை! புதுவகை கொரோனா எதிரொலி!
அதன்படி, மாணவர்கள் பள்ளியில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றும், பள்ளிக்கு செல்போன் எடுத்து வருவதை கண்டறிந்து தடுக்க கண்காணிக்கப்படுகிறது. மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்க செல்போன் பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது. இதனை வகுப்பு ஆசிரியர்கள் சோதனை செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனை, ‘சுவிட்ச் ஆப்’ செய்து விடுவார்கள் என்றும், வகுப்பறை தவிர மற்ற நேரத்தில் தேவையான விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்வார்கள் என்றும் உடுமலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.