Post Office தினசரி ரூ.70 முதலீட்டில் ரூ. 1.5 லட்சம் வழங்கும் சேமிப்புத் திட்டம் – முக்கிய விவரங்கள் இங்கே!
அஞ்சல் அலுவலக தொடர் வைப்பு கணக்கின் மூலம் நாம் தினசரி சேமிக்கும் குறைந்த அளவிலான பணம் 5 வருட முடிவில் ரூ.1.5 லட்சமாக நமக்கு கிடைக்கிறது. இதனை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
சேமிப்பு திட்டம்:
இந்தியா போஸ்ட் வழங்கும் பல சேமிப்புத் திட்டங்கள் நாட்டில் மிகவும் பிரபலமான மற்றும் ஆபத்து இல்லாத சேமிப்புத் திட்டங்களாக கருதப்படுகிறது. நடுத்தர மக்கள் எப்போதும் மிகவும் பாதுகாப்பான சேமிப்புத் திட்டங்களை மட்டுமே நம்பி இருக்கின்றனர். திட்டங்களின் முதிர்வு காலத்தில் கண்டிப்பாக அதிக அளவிலான லாபம் கிடைக்கும் படியாக திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு ஒருமுறை வட்டி விகிதம் கூட்டப்படும் தொடர் வைப்புத்தொகை போன்ற சேமிப்புத் திட்டங்களையும் அஞ்சல் அலுவலகம் வழங்குகிறது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? பெற்றோர்கள் கோரிக்கை! புதுவகை கொரோனா எதிரொலி!
5 ஆண்டு தொடர் வைப்பு கணக்கின் முக்கிய அம்சமாக நாம் நமது குழந்தையின் பெயரில் பெயரில் கணக்கினை தொடங்கி அதனை அவர்களின் எதிர்காலத்திற்காக சேமிக்கலாம். இதற்க்கு RD கணக்கில் தினமும் ரூ.70 டெபாசிட் செய்ய வேண்டும். இதனால் மாதம் ரூ.2,100 டெபாசிட் செய்வீர்கள். ஐந்து வருட முடிவில், கணக்கில் ரூ.1,26,000 சேமித்திருப்பீர்கள். இதற்கு மேல் நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு வட்டியும் அளிக்கப்படும். தபால் அலுவலகம் ஏப்ரல் 2020 முதல் அதன் தொடர் வைப்பு கணக்குகளுக்கு 5.8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதாவது, ஐந்து ஆண்டுகளில், திட்டத்தின் கீழ் வட்டி ரூ.20,000க்கு மேல் இருக்கும். எனவே, மொத்தப் பணத்தைக் கணக்கிட்டால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் குழந்தைக்கு ரூ. 1,46,000 திரும்ப கிடைக்கும்.
மார்ச் 17ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
மாதாந்திர வைப்புத்தொகைக்கான குறைந்தபட்சத் தொகை ரூ. 100 மற்றும் அதற்கு மேல் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்துக் கொள்ளலாம். மூன்று வருடங்கள் தொடர்ந்து டெபாசிட் செய்த பிறகு இந்தக் கணக்கை முன்கூட்டியே முடித்துக் கொள்ளலாம். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் கணக்கிடப்படும் வட்டி சேமிப்புக் கணக்கின் வட்டியைப் போலவே இருக்கும். கூடுதலாக இந்த திட்டத்தின் முதிர்வு காலத்தை கூடுதலாக 5 ஆண்டுகள் வரை நீடித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.