தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? பெற்றோர்கள் கோரிக்கை! புதுவகை கொரோனா எதிரொலி!

0
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? பெற்றோர்கள் கோரிக்கை! புதுவகை கொரோனா எதிரொலி!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? பெற்றோர்கள் கோரிக்கை! புதுவகை கொரோனா எதிரொலி!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? பெற்றோர்கள் கோரிக்கை! புதுவகை கொரோனா எதிரொலி!

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் புதிய வகை கொரோனா வேரியண்ட் நிமித்தம் தமிழகத்தில் 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு நேரடி பள்ளிகளை ரத்து செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது.

பள்ளிகள் மூடல்

கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இரண்டு ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த உயிர்கொல்லி நோய் தொற்று காரணமாக உலகளவில் இதுவரை பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. எனினும் இந்த வைரஸின் ஆதிக்கம் இன்று வரையும் குறைந்தபாடில்லை.

மார்ச் 17ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த 2 ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் ஒமிக்ரான் பாதிப்புகள் நிமித்தம் கல்வித்துறை நிறுவனங்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறைகளில் மாறி மாறி செயல்பட்டு வருகிறது. இப்போது, கொரோனா 3ம் அலை பரவலுக்கு பின்பாக தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மீண்டுமாக திறக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியம் – முக்கிய அறிவிப்பு!

இதற்கிடையில் உலக நாடுகளில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ்கள் இணைந்து டெல்டாக்ரான் என்ற புதிய வைரஸாக மாறி பாதிப்புகளை பதிவு செய்து வருகிறது. இந்த வைரஸ் மற்ற கொரோனா வேரியண்ட்களை விட அதிகளவு பாதிப்புகளை உள்ளடக்கியதாக இருக்கும் நிலையில், இது இந்தியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் புதிய திரிபை கருத்தில் கொண்டு 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு நேரடி பள்ளிகளை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு பெற்றோர்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!