தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை 2022 – அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் தற்போது தேதி மற்றும் தேர்வு அட்டவணை வெளியாகி இருக்கிறது.
தேர்வு அட்டவணை வெளியீடு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடத்திட்டங்களை சரியாக முடிக்க முடியவில்லை என்பதால் 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. மாணவர்களுக்கு அதுக்கு முன்னதாக நடத்தப்பட்ட தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் மார்ச் 7ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் இந்த ஆண்டுகள் கட்டாயம் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கால அட்டவணை, இன்று (மார்ச் 2) காலை 10:00 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி தற்போது அதற்கான கால அட்டவணை வெளியாகி இருக்கிறது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் வருகிற மே 6 முதல் தொடங்கப்பட்டு மே 30 ஆம் தேதி முதல் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் வருகிற மே 9 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு மே 31 ஆம் தேதி வரை முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 7 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகிற மே 5 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும் இறுதி தேர்வு மே 28 ஆம் தேதி உடன் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதி அன்று வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.