தமிழகத்தில் மார்ச் 7ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
விழுப்புரம் மாவட்டத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு மார்ச் 7ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பொது விடுமுறை
ஒவ்வொரு ஆண்டும் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள புகழ்பெற்ற அங்காளம்மன் கோயிலில் மாசி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாசி பெருவிழா சமீபத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த கொடியேற்றத்தை தொடர்ந்து 7ம் நாளில் அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழா மார்ச் 7ம் தேதியன்று நடத்தப்பட உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு? சம்பள கணக்கீடு விவரங்கள் இதோ!
அதனால் இந்த ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழா மார்ச் 7ம் தேதியன்று நடைபெற இருக்கிறது. இந்த தினத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
கோர்ட்டிற்கு கோபியை மனைவி உடன் வர சொன்ன வக்கீல், வருவாரா பாக்கியா? இன்றைய எபிசோட்!
என்றாலும் அரசு அத்தியாவசிய அலுவல்களை கவனிக்கும் மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்கள் ஆகியவை குறிப்பிட்ட அளவு பணியாளர்களுடன் இயங்கலாம். அதே நேரத்தில் மார்ச் 7ம் தேதியன்று மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகள் எதுவும் நடத்தப்பட இருந்தால் திட்டமிடப்பட்டபடி அன்றைய தினம் தேர்வுகள் நடைபெறும். மேலும், உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் மார்ச் 7ம் தேதிக்கு பதிலாக மார்ச் 19ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.