அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

0
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

அரசு ஊழியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ரம்ஜான் மாதத்தையொட்டி, அரசு ஊழியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே வீட்டுக்குச் செல்ல அனுமதி வழங்கி மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சூப்பர் அறிவிப்பு:

‘ரம்ஜான் பண்டிகை’, மற்றும் தியாகத் திருநாள் ‘பக்ரீத் பண்டிகை’ என வருடம் தோறும் இஸ்லாம் மார்க்கத்தில் இரண்டு பண்டிகைகள் மட்டுமே பெருநாளாக கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ரமலான் மாதத்தைப் பொறுத்தவரை எல்லா இஸ்லாமியர்களும் நோன்பு இருப்பார்கள். அதிகாலை 4 மணி அளவில் இருந்து மாலை 6.30 மணி வரை உண்ணாமலும், பருகாமலும் நோன்பு இருப்பார்கள். ரமலான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை சித்திரை திருவிழா 2022 – வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி எப்போது தெரியுமா?

ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும். ரமலான் மாத இறுதியில் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு தொடங்கி இன்றுடன் மூன்று நாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில், முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜானை முன்னிட்டு மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து தெலங்கானா மாநில தலைமை செயலாளர் சோமேஷ் குமார் செய்தி குறிப்பு வெளியிட்டு உள்ளார்.

இந்த செய்தி குறிப்பில், மாநிலத்தில் பணிபுரியும் அனைத்து முஸ்லிம் அரசு சேவை / ஒப்பந்தம் / வெளியீட்டு வாரியங்களின் பொதுத் துறை ஊழியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்களது அலுவலகங்களில் இருந்து மாலை 4.00 மணிக்கு வீட்டுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 3, 2022 முதல் மே 2, 2022 வரை அமலில் இருக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேற்கண்ட கால கட்டத்தில் தேவை ஏற்படும் போது தவிர மற்ற நேரங்களில் மாலை 4 மணிக்கு தங்களது கடமையை ஆற்ற முன்னதாகவே செல்லலாம் இதற்கு அம்மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!