மதுரை சித்திரை திருவிழா 2022 – வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி எப்போது தெரியுமா?

0
மதுரை சித்திரை திருவிழா 2022 - வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி எப்போது தெரியுமா?
மதுரை சித்திரை திருவிழா 2022 - வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி எப்போது தெரியுமா?
மதுரை சித்திரை திருவிழா 2022 – வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி எப்போது தெரியுமா?

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம் நடைபெற உள்ளது. இதனை காண ஏராளமான பக்தர்கள் திரளாக வருகை புரிவர்.

சித்திரை திருவிழா:

மதுரை என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது சித்திரை திருவிழா தான். ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் அதாவது தமிழில் சித்திரை மாதம் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும். இந்த திருவிழாவில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் ஒன்று கூடுவர். அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், பூ பல்லக்கு என அடுத்தடுத்த விழாக்கள் நடைபெறும். இந்த நிலையில் கடந்த 2 வருடமாக பரவிய கொரோனா பெருந்தொற்றால் சித்திரை திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

TNPSC 626 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் அதிகாரப்பூர்வ வெளியீடு!

மேலும் தேரோட்டம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலை நோக்கி திரும்பி வருகின்றனர். மேலும் கடந்த 31ம் தேதியுடன் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டது. இதனையத்து இந்தாண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் அனுமதியின்றி திருவிழா நடைபெற்றதால், வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி 16ஆம் தேதி காலை 5.50 முதல் 6.20 மணிக்குள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 15ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை நிகழ்வும் நடைபெற்றது. மேலும் ஏப்ரல் 17 அன்று கள்ளழகர் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் காலையில் சேஷ வாகனத்தில் எழுந்தருள்வார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!