10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!!
கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. கல்வியாண்டு தொடங்கி 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் கொரோனா தாக்கமும் குறைந்து வருவதால் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் பள்ளிகள் திறப்பது குறித்த குறித்த முடிவுகளை மத்திய அரசு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் விட்டது. இந்நிலையில் ஜனவரி 1 முதல் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஒடிசா மாநிலத்தில் கல்லூரிகள் கடந்த டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன. தற்போது ஒடிசா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் முதுநிலை உதவியாளர் பணி விடைக்குறிப்பு, தேர்வு முடிவுகள் வெளியீடு – வழக்கு முடித்து வைப்பு!!
இதுகுறித்து அந்த மாநிலத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான வகுப்புகள் 100 நாட்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே அவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
மத்திய அரசு வெளியிட்ட கொரோனா நோய் கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றி வகுப்பறையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஒரு வகுப்பறையில் அதிகபட்சமாக 20-25 மாணவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். பள்ளி வளாகத்திற்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்”, என்று தெரிவித்தனர்.
சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு துவக்கம் – யுபிஎஸ்சி அறிவிப்பு!!
மேலும் இதுகுறித்து மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எஸ்.ஆர்.டேஷ் கூறுகையில், “பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் பாடத்திட்டத்தில் 30% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்த பின் வாரம் முழுவதும் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்