ஆவின் முதுநிலை உதவியாளர் பணி விடைக்குறிப்பு, தேர்வு முடிவுகள் வெளியீடு – வழக்கு முடித்து வைப்பு!!

0
ஆவின் முதுநிலை உதவியாளர் பணி விடைக்குறிப்பு, தேர்வு முடிவுகள் வெளியீடு - வழக்கு முடித்து வைப்பு!!
ஆவின் முதுநிலை உதவியாளர் பணி விடைக்குறிப்பு, தேர்வு முடிவுகள் வெளியீடு - வழக்கு முடித்து வைப்பு!!
ஆவின் முதுநிலை உதவியாளர் பணி விடைக்குறிப்பு, தேர்வு முடிவுகள் வெளியீடு – வழக்கு முடித்து வைப்பு!!

மதுரை ஆவினில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அதற்கான தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது எழுத்து தேர்வு முடிவுகள் ஏதும் வெளியிடாமல் நேர்முக தேர்வு நடத்தப்பட்டதாக மதுரையை சேர்ந்த ஒருவர் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி தேர்வுக்கான விடை குறிப்பு மற்றும் எழுத்து தேர்வு முடிவுகளை ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு:

மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், தனி செயலர், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் உள்ளிட்ட பணிக்கான அறிவிப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. நவம்பர் 22-ஆம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெற்றது. ஆனால் இந்த தேர்வுக்கான முடிவுகள் ஏதும் இதுவரை வெளியிடப்படாமல் நேர்முக தேர்வு நடைபெற்றதாக மதுரையை சேர்ந்த மணிமாறன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு துவக்கம் – யுபிஎஸ்சி அறிவிப்பு!!

மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த மணிமாறன் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த மனுவில் குறிப்பிட்டுள்ளவை, “மதுரை ஆவினில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் நான் முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தேன். அதற்கான எழுத்து தேர்வு நவம்பர் 22-ஆம் தேதி எழுதினேன். ஆனால் இதுவரை தேர்வு முடிவுகளோ, ஆன்சர் கீ எதுவுமே வெளியிடப்படவில்லை, ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை நேர்முக தேர்வு மட்டும் நடத்தப்பட்டது. எனவே எழுத்துத்தேர்வின் முடிவுகள் வெளியிட்ட பின் நேர்முக தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவிட வேண்டு எனவும் எனக்காக ஒரு இடத்தை ஒத்திவைக்க வேண்டும்” எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? இன்று முக்கிய அறிக்கை தாக்கல்!!

அந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆவின் நிறுவனத்தின் சார்பாக வழக்கறிஞர் மாரிஸ்குமார் ஆஜராகினர். பின் வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆவின் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட தேர்வுகள் குறித்து விடைக்குறிப்பு மற்றும் எழுத்து தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி விடைக்குறிப்பு மற்றும் எழுத்து தேர்வு முடிவுகள் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டன என்று குறிப்பிட்டனர். மேலும் இந்த மனு குறித்து எந்த தடை உத்தரவும் தேவையில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!