தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,192 பேருக்கு கொரோனா தொற்று – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு மிகவும் சீராக குறைந்து பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் கொரோனா ஊரடங்கு கால கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அரசு அளித்துள்ளது. இந்நிலையில், இன்று மேலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அரசு அளித்த அறிக்கையின் படி, புதிதாக தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களை கொண்ட நாடுகளின் பட்டியல் – ஆய்வு அறிக்கை!
இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,88,284 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 35,912 ஆக உயர்ந்துள்ளது. 1,423 பேர் தொற்று பதிப்பில் இருந்து ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தம் 26,37,802பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் – மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை!
நேற்றைய மாலை நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 14,570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 150 பேர், கோவையில் 130 பேருக்கும், செங்கல்பட்டுவில் 87 பேருக்கும், ஈரோட்டில் 88 பேருக்கும், திருப்பூரில் 72 பேருக்கும் மாவட்ட வாரியாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.