‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் – மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை!

0
'ஒரே நாடு ஒரே கார்டு' திட்டத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் - மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை!
'ஒரே நாடு ஒரே கார்டு' திட்டத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் - மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை!
‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் – மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை!

‘ஒரே நாடு; ஒரே கார்டு’ திட்டம் மூலம் ரேஷன் கார்டில் மேலும் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

புதிய கட்டுப்பாடுகள்:

நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும், ஒரே கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் திட்டம் தான் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஆகும். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க முடியும். மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொது விநியோக அமைச்சகம் சார்பில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டு தமிழக அரசின் பொது விநியோகத் திட்ட அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 5 மாதங்களில் 63 மின் விபத்துகள் – விபத்து குறித்து ஆய்வுபணிகளுக்கு உத்தரவு!

ரேஷன் அட்டைகள் ஸ்மார்ட் கார்டுளாக மாற்றப்பட்டுள்ளதால் ஒவ்வொரு முறையும் இந்த கார்டைப் பயன்படுத்தி எங்கு பொருள் வாங்கினாலும் அது மையமாக இருக்கும் ஒரு பொது தரவுத்தளத்தில் சேர்க்கப்படும். இதற்காக அனைத்து ரேஷன் கடைகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. முன்னதாகவே அனைத்து உறுப்பினர்களின் கைரேகைகளும் ஸ்மார்ட் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 26 மாநிலங்களை சேர்ந்த 58, 332 ரேஷன் அட்டைதாரர்கள் பலனடைந்துள்ளனர். இதுவரை 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் வெற்றி கோப்பையை தமிழக முதல்வரிடம் தோனி அளிப்பார் – சென்னை அணி உரிமையாளர் உறுதி!

நாடு முழுவதும் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி ரேஷனில் உணவுப் பொருட்களை பெறுகின்றனர். அவர்களுக்கு மேலும் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பதற்காக, பொது விநியோக திட்ட முறையில் மாற்றங்களை செய்ய ஒன்றிய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே ரேஷன் கார்டுகளின் தரத்தை மாற்ற முடிவு செய்து, மாநில அரசுகளுடன் கடந்த ஆறு மாதங்களாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.

மாநில அரசுகள் அளித்த பரிந்துரைகளுடன் சேர்த்து புதிய விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளது. இந்த வழிமுறைகள் விரைவில் இறுதி செய்யப்படும். புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்போது, தகுதியான நபர்கள் மட்டுமே ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை பெறமுடியும். தகுதியற்ற நபர்கள் பயனடைய முடியாது என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!