தமிழகத்தில் 5 மாதங்களில் 63 மின் விபத்துகள் – விபத்து குறித்து ஆய்வுபணிகளுக்கு உத்தரவு!
தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் மின்கம்பி அறுந்து 63 விபத்துகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து நேரடியாக விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து, தடுப்பு நடவடிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகியவை அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய மின்வாரியம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மின்விபத்துகள்:
தமிழகத்தில் புதிய ஆட்சிக்கு பின்னர் மின்வாரியத்தில் மிகவும் தீவிரமாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மின்சாரத்துறை அமைச்சர் பல முக்கிய அறிவிப்புகளை மின்வாரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து விபத்துகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 5 மாதங்களில், 9 மண்டலங்களில் 63 மின் விபத்து சம்பவங்கள், மின்கம்பி அறுந்து விழுந்ததன் காரணமாக நிகழ்ந்துள்ளது.
ஐபிஎல் வெற்றி கோப்பையை தமிழக முதல்வரிடம் தோனி அளிப்பார் – சென்னை அணி உரிமையாளர் உறுதி!
இதனால் மொத்தம் 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதிதாக நியமிக்கப்பட்ட கேங்மேன் பணியாளர்கள், களப் பணியாளர்கள் மின் விபத்தில் சிக்குவது அதிகரித்துள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மற்றும் சரியான முறையில் பயிற்சி அளிக்கப்படாததும் விபத்து அதிகரிப்பதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கம்பிகள் அறுந்து விழுவதால் பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதால் பகிர்மானப் பிரிவு தலைமைப் பொறியாளர் ஒவ்வொரு மின் விபத்தையும் தெளிவாக ஆராய வேண்டும் என்றும், பாதுகாப்புப் பிரிவின் உதவி செயற்பொறியாளர், மின் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, மீண்டும் விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN TRB ஆசிரியர்களின் நேரடி பணி நியமன வயது வரம்பு உயர்வு – தமிழக அரசு ஆணை!
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்காமல் மின் விபத்து நிகழ்ந்தால், களப் பொறியாளர் மற்றும் களப் பணியாளரே பொறுப்பு எனவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பணிகளுக்கு முன் கட்டாயம் பின்பற்ற அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின் நிறுத்தம் செய்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் போது, மின் விநியோகம் தடை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். உயிரிழப்புகள் ஏற்பட்ட மின் விபத்துக்களை மின்னியல் பிரிவில் செயற்பொறியாளர் பதவிக்கு குறையாத ஒரு அதிகாரி நேரடியாக விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து, தடுப்பு நடவடிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகியவை அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.