ஐபிஎல் வெற்றி கோப்பையை தமிழக முதல்வரிடம் தோனி அளிப்பார் – சென்னை அணி உரிமையாளர் உறுதி!
துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், வெற்றிக் கோப்பையை கேப்டன் தோனி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக அளிப்பார் என்று அணி உரிமையாளர் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் வெற்றி:
கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பல வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்ட காரணத்தால் மே 4ம் தேதியோடு இடை நிறுத்தப்பட்டது. பாதிப்பு குறைந்த பின்னர் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் இரண்டாம் கட்டமாக தொடங்கப்பட்டது.
TN TRB ஆசிரியர்களின் நேரடி பணி நியமன வயது வரம்பு உயர்வு – தமிழக அரசு ஆணை!
கடந்த அக்டோபர் 15ம் தேதி சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் இறுதி போட்டிகள் நடந்தது. அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் 2021 கோப்பையை சென்னை நான்காவது முறையாக வென்றது. ஐபிஎல் கோப்பையை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தினர் சென்னையில் உள்ள கோயில் ஒன்றில் பூஜை செய்தனர். அதன்பிறகு, அணியின் உரிமையாளர் சீனிவாசன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திமுக ரூ.1 கோடி – கனமழை, வெள்ளம் பாதிப்பு!
அப்போது, தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை. 20 -20 உலகக் கோப்பைக்குப் பிறகு தோனி நாடு திரும்பியவுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அணிக்குப் பாராட்டு விழா நடத்தப்படும். ஐபிஎல் கோப்பையை முதல்வர் ஸ்டாலினிடம் தோனி அளிப்பார். அந்த வெற்றி விழாவை சேப்பாக்கம் மைதானத்திலேயே நடத்த உள்ளோம். அப்போதுதான் மக்கள் கலந்துகொள்ள முடியும்’ என்று சீனிவாசன் தெரிவித்தார். இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.