தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? தொடக்க கல்வித்துறை விளக்கம்!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் உள்ள LKG மற்றும் UKG வகுப்புகளை மூடுவது குறித்து வெளி வந்த போலியான தகவலுக்கு தற்போது பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வகுப்புகள் மூடல்
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகள் சரிவடைந்து வந்த நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் பிப்ரவரி 1 முதல் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க பள்ளி கல்வித்துறை சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
TNPSC மூலம் இனி இந்த பதவிகளுக்கும் ஆட்கள் தேர்வு – உயர்கல்வித்துறை முக்கிய முடிவு!
அந்த வகையில் முதன் முதலாக தமிழக அரசின் சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2,381 அங்கன்வாடிகளில் பயின்று வரும் 52,933 குழந்தைகளுக்கு LKG மற்றும் UKG வகுப்புகளை துவங்க திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த 2018ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு, அனைத்து அரசு அங்கன்வாடி மையங்களிலும் தற்போது வரை LKG மற்றும் UKG வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடிகளில் இயங்கி வரும் LKG மற்றும் UKG வகுப்புகள் மூடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருந்தது.
பிப்ரவரி 21 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – மாநில கல்வித்துறை முடிவு!
இந்த தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளி கல்வித்துறை, ‘தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் LKG மற்றும் UKG வகுப்புகள் மூடப்பட இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் போலியானது. இந்த பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகளை நடத்த தேவையான ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் அங்கன்வாடிகளில் LKG மற்றும் UKG வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கூடிய விரைவில் நடைபெறும்’ என்று குறிப்பிட்டுள்ளது.