M.Sc. முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை
தேசிய வாழை ஆராய்ச்சி மையமானது (NRCB) அங்கு காலியாக உள்ள Research Assistant பணிகளுக்காக பணியிட அழைப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அப்பணியிடங்களுக்கு திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைப்பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NRCB |
பணியின் பெயர் | Research Assistant |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 19.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
NRCB வேலைவாய்ப்பு 2021 :
NRCB மையத்தில் Research Assistant பணிகளுக்காக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
NRCB கல்வித்தகுதி :
அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Bioinformatics / Biotechnology பாடங்களில் M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிகளில் 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
NRCB ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வானவர்களுக்கு அதிகபட்சம் ரூ.24,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Research Assistant தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 19.08.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.