NPS திட்ட பயனாளிகளுக்கு குட் நியூஸ் – மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

0
NPS திட்ட பயனாளிகளுக்கு குட் நியூஸ் - மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

மத்திய அரசின் NPS ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை எடுக்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதற்கான புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியம்:

இந்தியாவில் கடந்த 2004 ஆம் ஆண்டு NPS ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் தற்போது அனைத்து குடிமக்களும் பயன் பெற்று வருகின்றனர். இந்த திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதில் வருமான வரி சட்டத்தின் கீழ் வரி விலக்கு சலுகையும் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் தற்போது குறிப்பிட்ட ஓய்வூதியத்தொகையை எடுத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. NPS திட்ட பயனாளிகள் 25% தொகையை திரும்ப பெறலாம். அதாவது குழந்தைகளின் உயர் கல்வி குழந்தைகளின் திருமண செலவு வீடு அல்லது பிளாட் வாங்குதல் மற்றும் மருத்துவ செலவுகளுக்காக மட்டுமே தொகையை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் பெறவிருக்கும் தொகையை சுய அறிக்கையாக இணையதளத்தில் பதிவிட வேண்டும். பிறகு வங்கி கணக்கிற்கு தொகை மாற்றப்படும்.

Follow our Instagram for more Latest Updates

அரசு ஆராய்ச்சி துறையில் மாதம் ரூ.40,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ்பண்ணிடாதீங்க !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!