தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் வருகிற ஜன. 25 ஆம் தேதி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் விடுமுறை
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் வள்ளலார் நினைவு தினம் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் அவருடைய நினைவு தினமான ஜன. 25 ஆம் தேதி மதுபான கடைகள் செயல்படாது என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள் இயங்காது.
மேலும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதிகளால் நடத்தப்படும் மதுபான கூடங்கள் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் அன்றைய தினம் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசின் உத்தரவை மீறி செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Join Our WhatsApp Channel ” for Latest Updates
அரசு ஆராய்ச்சி துறையில் மாதம் ரூ.40,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ்பண்ணிடாதீங்க !