தமிழகத்தில் நாளை (நவ.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக பல்வேறு பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் நாளை மின்தடை என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. தற்போது மழைக்காலம் என்பதால் மின் கம்பிகளில் பிளவு ஏற்பட்டு அறுந்து விழுகிறது. மேலும் பழுதான மின் கம்பங்கள் சாலைகளில் அநேக இடங்களில் விழுகின்றன. இதனால் ஏராளமான இடங்களில் தவிர்க்க முடியாத விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் மழைக்காலம் என்பதால் சாலைகளில் நீர் தேக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் மக்கள் வெளியே செல்லும் போது அதிக அளவு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்திய ஐடி நிறுவனங்களில் 4.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – TCS முதல் Infosys வரை இலக்கு!
ஆதலால் தமிழக அரசு மின் பராமரிப்பு பணிகளை குறிப்பிட்ட நேரம் செலவிட்டு மேற்கொள்ள வேண்டும். அதனால் மின் வாரியம் மாதந்தோறும் மின்தடையை அறிவித்து மின் பராமரிப்பு பணிகளை முறையாக கடைப்பிடித்து வருகிறது. இதனால் பல்வேறு விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து தேவகோட்டை பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை என்று சிவகங்கை மின்பகிர்மானத்தின் வட்ட மேற்பார்வை பொறியாளர் ஆ. சகாயராஜ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – திருமலை செல்லும் வழித்தடங்கள் சீரமைப்பு!
இந்த மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான தேவகோட்டை நகர், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, கோட்டூர், காரை, வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தகுடி, ஊரணி கோட்டை பனங்குளம், மாவிடுதிக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை ஆகிய பகுதியிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்றும் அறிவித்துள்ளது. மின் பராமரிப்புக்குக்கான பணிகள் முடிந்தவுடன் விரைவில் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.