தேசிய பென்சன் திட்டத்தில் புதிய விதிமுறைகள் அறிவிப்பு – முழு விவரம் இதோ!
மத்திய அரசின் பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA, தேசிய பென்சன் திட்டத்தை (NPS) நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில் பென்சன் திட்டத்தின் விதிமுறைகளில் சில திருத்தங்கள் பற்றி அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
பென்சன் திட்டம்:
தேசிய பென்சன் திட்டமானது அரசு துறைகளில் பணிபுரிந்த ஊழியர்கள், அவர்களின் ஓய்வூதிய காலத்தில் பென்சன் வாங்குவதற்காக கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தை பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA நிர்வகித்து வருகிறது. முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் அதன் பின் தனியார் ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் நீங்கள் இருந்தால் முதலில் உங்களது பணம் பங்குச் சந்தை, பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படும்.
அதன் பின் நீண்டகால அடிப்படையில் உங்களின் பணம் அதிகரிக்கும், அதன் மூலம் பணி ஓய்வுபெறும் போது உங்களது தேசிய பென்சன் திட்ட கணக்கில் உள்ள நிதியில் 60% வரை எடுத்துக்கொள்ளலாம். மேலும் மீதத் தொகையை வைத்து ஆண்டுத்தொகை வாங்க வேண்டும். அதன் மூலமாக உங்களுக்கு மாதந்தோறும் பென்சன் வழங்கப்படும். இதற்கு முன்னதாக பணி ஓய்வுபெறும்போது ஆண்டுத்தொகை சேவையை வாங்குவதற்கு தனியாக விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டியதாக இருந்தது.
ஒரே ஆப் மூலமாக ஆதார் விவரங்களை தெரிந்து கொள்ள முடியுமா?- பொதுமக்களுக்கான முக்கிய தகவல்!
Exams Daily Mobile App Download
ஆனால் இப்போது அந்த விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ஆண்டுத்தொகை சேவையை பெற நீங்கள் தேசிய பென்சன் திட்டத்தில் இருந்து வெளியேறுவதற்கான படிவமே போதும். அது மட்டுமில்லாமல் தேசிய பென்சன் திட்ட பயனாளிகள் ஓய்வூதியம் பெறும் காலத்தில் டிஜிட்டல் முறையிலேயே வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் வழங்க வேண்டும். இது ஓய்வூதியதாரர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்பதை உணர்த்தும் சான்றிதழ் ஆகும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்