மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு குறித்த அறிவிப்பு – தகவல் வெளியீடு!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் எப்போது உயர்த்தப்படும் என்பது போன்ற தகவல்கள் தற்போது அரசு துறை வட்டாரங்களிடம் இருந்து வெளி வர துவங்கி உள்ளது.
DA உயர்வு
கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்ட கொரோனா பரவலின் காரணமாக பல விதங்களில் மக்கள் பாதிப்படைந்தனர். அதிலும் குறிப்பாக அரசு துறையில் உள்ள ஊழியர்கள் மிகவும் பாதிப்பினை சந்தித்தனர் என்று தான் கூற வேண்டும். அவர்களுக்கு வருடம்தோறும் வழங்கப்படும் DA உயர்வு இந்த முறை நிதி நெருக்கடியின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மாநில அரசு ஊழியர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவித்தது.
இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களும் அடுத்து தங்களுக்கு எப்போது அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று எதிர்பார்ப்போடு இருந்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசு சார்பில் இருந்து இன்னும் எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இது பணியாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. ஜூலை மாதத்தின் இறுதியில் இது குறித்தான அறிவிப்பு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
EPFO ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய திட்டம் அறிமுகம்!
Exams Daily Mobile App Download
தற்போது அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர இருப்பதால், இந்த முறை DA உயர்வு குறித்து அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறாக DA தொகை அதிகரிக்கப்பட்டால், 4 சதவீதம் அதிகரித்து தற்போது வழங்கப்பட்டு வரும் 34 சதவீதத்துடன் 38 சதவீதம் உயரும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அரசு ஊழியரின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்