EPFO ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய திட்டம் அறிமுகம்!
EPFO திட்டத்தின் மூலமாக மாதந்தோறும் குறைந்தபட்சமாக ரூபாய் 3000 ஓய்வூதியம் பெறுவதற்கான ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் குறித்தான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
EPFO திட்டம்:
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலமாக சந்தாதாரர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே மாதத்திற்கு ரூபாய் 15 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் யுனிவர்சல் பென்ஷன் ஸ்கீம் என்கிற ஒரு புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது இந்த திட்டத்தின் மூலமாக 60 வயதை எட்டிய பிறகு ஓய்வூதியதாரர்கள் குறைந்தபட்சமாக மாதந்தோறும் ரூபாய் 3000 ஓய்வூதியமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், இந்த புதிய திட்டத்தின் மூலமாக குழந்தைகளுக்கான ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் மற்றும் ஊனமுற்றோருக்கான ஓய்வூதிய தொகையும் வழங்கப்படும். இதற்கு முன்பு ஊழியர்களுக்கான வைப்பு நிதி திட்டத்திற்கான சேவை காலம் 10 ஆண்டுகளாக இருந்தது. தற்போது குறைந்தபட்ச தகுதி காலம் 15 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான ரூ.1500 உதவித்தொகை திட்டம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Exams Daily Mobile App Download
மேலும் இபிஎப்ஓ உறுப்பினர் 60 வயதிற்கு முன்பாகவே இறந்துவிட்டால் அதற்கான ஓய்வூதியப் பணம் குடும்பத்திற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் இதில் செய்யப்பட்டுள்ளது. மேலும், இ பி எஃப் திட்டத்தில் தற்போது 8.1 சதவீதத்தில் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உறுப்பினர்கள் தாமாகவே முன் வந்து தங்களுக்கு உரிய பங்களிப்பை தேர்வு செய்து அதிக ஓய்வூதியத்திற்கான பெரிய தொகையை இந்த திட்டத்தின் மூலமாக சேமித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
வருங்கால வைப்பு நிதி யில் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நடுவண் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்….அனைத்து ஊடகத்துறையில் உள்ளவர்களுக்கும் பொருந்தும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வேண்டுகிறேன்.