தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான ரூ.1500 உதவித்தொகை திட்டம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான ரூ.1500 உதவித்தொகை திட்டம் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான ரூ.1500 உதவித்தொகை திட்டம் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான ரூ.1500 உதவித்தொகை திட்டம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டு முதல் புதிதாக தொடங்க இருக்கும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

உதவித்தொகை:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் அரசு பல புதிய நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களை குறிப்பிட்ட வகுப்புகளின் வாரியாக பிரித்து இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆரம்ப பள்ளி மாணவர்களுக்காக காலை சிற்றுண்டி பள்ளியிலேயே வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பில் குறிப்பிட்ட சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இடைநிலை மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குவதற்காக திறனறிவு தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போது 11ம் வகுப்பு மாணவர்களுக்கான மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழக்கும் திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்மொழி திறனறிவு தேர்வு வரும் அக்டோபர் 1ம் தேதி அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் 11ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி, தனியார் பள்ளி, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற அனைத்து வாரியத்தை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொள்ளலாம். இத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் பள்ளிகள் மூலம் செய்யப்பட்டு, தேர்வுக்கான கட்டணம் ரூ.50ம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

Exams Daily Mobile App Download

11ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி திறனறிவு தேர்வு விண்ணப்ப பதிவிற்கு செப்டம்பர் 9ம் தேதி தான் இறுதி நாள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்றுடன் அனைத்து விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டு விட்டது. மேலும், 10ம் வகுப்பு தமிழ்மொழி பாடத்தின் அளவுறுகளை அடிப்படையாக கொண்டு இத்தேர்வு நடத்தப்படும். மொத்தம் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும், மற்ற இடங்களில் மற்ற பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் என்று மொத்தம் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!