மத்திய அரசு ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி குறித்து வைரலாகும் செய்தி – அரசு விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு செப் 28 ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி 4% உயர்த்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பு ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரும் என சமூக வலைத்தளங்களில் வைரலாகும் செய்தி தவறானது என அரசு விளக்கம் அளித்துள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
ஆண்டுதோறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்து கடந்த செப் 28 ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிப்பு வெளியானது. அதில் அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38% ஆக உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்நிலையில் ஒரு சில சமூக ஊடகங்களில் இந்த 38% அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2022 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என செய்திகள் பரவி வருகிறது. இந்த அறிவிப்பை நம்பி பலர் அகவிலைப்படி உயர்வு வரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். அந்த வகையில் அரசு இது குறித்து விசாரணை நடத்தியது. அதில் ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வு அமலாகும் என்ற செய்தி தவறானது என அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசு உயர்த்தியது உண்மை தான் ஆனால் அது எப்போது இருந்து அமலாகும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
Exams Daily Mobile App Download
திருத்தப்பட்ட ஊதியக் கட்டமைப்பில் உள்ள அடிப்படை ஊதியம் என்பது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 7வது ஊதியக் குழுவின் கட்டமைப்பின்படி மட்டுமே வழங்கப்படும் என்பதால், இது குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும் வரை தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அரசு அறிவுறுத்தி இருக்கிறது. தற்போது ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் 34% ஊதியம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் 38% ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்