SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கான அறிவிப்பு – KYC அப்டேட்! நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!
SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் KYC செயல்முறையை முடிக்காவிட்டால் நிதிப்பரிமாற்றம் தொடர்புடைய எந்தவொரு சேவைகளையும் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், KYC அப்டேட் செய்யாத வாடிக்கையாளர்களின் கணக்குகளையும் வங்கி நிர்வாகம் முடங்கியுள்ளது.
KYC அப்டேட்
தற்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியின் வாடிக்கையாளர்கள் KYC விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்திற்காக நிர்வாகம் அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது வங்கியின் இந்த நடவடிக்கை தொடர்பாக பல வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகார் அளித்து வருகின்றனர். இது தொடர்பாக பெறப்பட்டுள்ள புகாரில், ஜூலை 1ம் தேதிக்குள் KYC விவரங்களைப் புதுப்பிக்காத வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளை நிர்வாகம் முடக்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
இதன் காரணமாக, பல வாடிக்கையாளர்கள் தங்கள் எஸ்பிஐ கணக்குகளில் எந்தப் பரிவர்த்தனையையும் செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு SBI வங்கி நிர்வாகம் பதிலளித்து கூறுகையில், ‘KYC என்பது சீரான இடைவெளியில் நடத்தப்படும் ஒரு பயிற்சி என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். உங்கள் கணக்கு KYCக்கு வரவேண்டியுள்ளது போல் தெரிகிறது. எனவே செய்தி உங்களுக்கு அனுப்பப்பட்டது. தயவுசெய்து வங்கி கிளைக்கு சென்று கணக்கின் சீரான செயல்பாட்டிற்காக KYC செயல்முறையை முடிக்கவும்’ என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – தரவரிசை பட்டியல் வெளியீடு!
இப்போது SBI வங்கி வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் ஒருவர் வங்கி கிளைகளில் KYC விவரங்களை புதுப்பிக்கலாம் அல்லது KYC ஆவணங்களுக்கான நகலை உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் அவர்களின் கிளை மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக அதிகரித்து வரும் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பரிவர்த்தனைகளையும் செய்யும் உரிமையை வழங்குவதற்கு முன் KYC செயல்முறையை மேற்கொள்ளுமாறு இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.