தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – தரவரிசை பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக பொறியியல் கல்லூரி முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தரவரிசைப் பட்டியல்:
தமிழகத்தில் கடந்த 20ம் தேதி அன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து பொறியியல் படிப்பின் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர https://www.tneaonline.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் தற்போது வரை பொறியியல் படிப்புகளில் சேர 1 1/2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜூலை 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெறும். இதையடுத்து மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிடப்படும். இவற்றில் ஏதாவது குறை இருப்பின் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மாணவர்கள் தெரிவிக்கலாம். என்றும், ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? கொரோனா பாதிப்பு எதிரொலி!
இந்நிலையில் 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. சென்னை கிண்டி , குரோம்பேட்டை பொறியியல் கல்லூரிகள் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளன. மேலும் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை பார்த்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக் கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.