தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்…. வருமான வரித்துறை அதிரடி..!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டிடிஎஸ் வரியை உரிய கணக்கில் சேர்க்காத 5563 பேருக்கு வருமான வரித்துறை அதிரடியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
வருமான வரித்துறை அதிரடி:
டிடிஎஸ் என்பது சம்பளத்தில் கழிக்கப்பட்ட வரி. தனியா தனி நபர் செலுத்தும் தொகை ரூபாய் 50 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கும் நிறுவனங்கள் அவர்களிடம் வரிக்கான டிடிஎஸ் தொகையை பிடித்தம் செய்வது கட்டாயம். இந்தத் தொகை சம்பளம் வழங்கும் பொறுப்பு அதிகாரி வருமான வரித்துறைக்கு செலுத்தினால் மட்டுமே அந்த தொகை சம்பந்தப்பட்ட நபரின் வருமான வரி கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
3000 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் இருந்து விலக்கு – தேர்தல் அதிகாரி தகவல்!
கடந்த 31ஆம் தேதி முடிந்துள்ள நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறையில் பிடித்தம் செய்த தொகையை செலுத்தாமல் ரிட்டன் அறிக்கை தாக்கல் செய்யாமல் நிலுவையில் உள்ளதை வருமானவரித்துறை கண்டறிந்துள்ளது. இதனை அடுத்து சம்பளம் வழங்கும் அலுவலர்களாக உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட 5563 பேருக்கு வருமான வரித்துறை அதிரடியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பித்தம் தொகையை விரைவில் செலுத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.