ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 24ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
உள்ளூர் விடுமுறை
உலகப் புகழ்பெற்ற ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற இருப்பதால் வரும் 24ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்ஹாவில் வைத்து சந்தனக்கூடு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா ஜூன் 1ம் தேதி மவுலீதுடன் தொடங்கியது.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து ஜூன் 11ம் தேதி ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து மாலை 3 மணிக்கு கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக தர்ஹா வந்தடைந்து. இதற்கு அடுத்தபடியாக வரும் ஜூன் 23ம் தேதியன்று சந்தனக்கூடு திருவிழா துவங்க இருக்கிறது. அதை தொடர்ந்து ஜூன் 24ம் தேதி அதிகாலையில் சந்தனக்கூடு தர்காவிற்கு வந்தடைந்தது. பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயக்கத்தில் இருக்கும் மூர்த்தி , முல்லையிடம் பேசாமல் தவிர்க்கும் தனம் – இன்றைய எபிசோட்!
இதை தொடர்ந்து ஜூன் 30ம் தேதி கொடியிறக்கத்துடன் பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு இந்த விழா நிறைவடைய இருக்கிறது. இப்போது ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும் ஜூன் 24ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் ஜூலை 2ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.