மயக்கத்தில் இருக்கும் மூர்த்தி , முல்லையிடம் பேசாமல் தவிர்க்கும் தனம் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் மூர்த்தி மயக்கத்தில் இருப்பதால் அவரை பார்த்து வருத்தப்படுகிறார். பின் ஜீவா தனத்திற்கு ஆறுதல் சொல்கிறார். பின் ஐஸ்வர்யாவும் மீனாவும் வீட்டிற்கு வருபவர்களுக்காக சமைத்து வைக்கின்றனர். பின் முல்லை தனத்திடம் பேச வர ஆனால் தனம் விலகி செல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தி இன்னும் கண் முழிக்காமல் இருப்பதால் தனம் மூர்த்தியை நினைத்து வருத்தப்படுகிறார். அப்போது நர்ஸ் வந்து பார்த்துவிட்டு அவர் நன்றாக இருக்கிறார். ஆனால் இன்னும் மயக்கமாக இருக்கிறார் என சொல்கிறார். உள்ளே சென்று இருவர் மட்டும் பாருங்கள் என சொல்ல தனமும் ஜீவாவும் மட்டும் உள்ளே சென்று பார்க்கின்றனர். அப்போது மூர்த்தி மயக்கத்தில் இருக்க தனம் அவரை பார்த்து வருத்தப்பட்டு அழுகிறார். எப்படி இருந்த மனுஷன் இப்படி படுத்து இருக்கிறார் என தனம் அழ ஜீவா எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
அப்போது நர்ஸ் வந்து பார்த்துவிட்டு அவர் முன் இப்படி எல்லாம் அழாதீங்க என சொல்ல அவருக்கு ஒன்றுமில்லை எல்லாம் சரியாகிவிடும் என நர்ஸ் சொல்கிறார். அதனால் தனம் சற்று தைரியமாக வெளியே வருகிறார். வெளியே வந்து அவருடைய அம்மாவிடம் மாமா நன்றாக இருக்கிறார் ஆனால் மயக்கத்தில் இருப்பதாக சொல்கிறார். ஜீவா கதிருக்கு கேட்க வேண்டும் என அண்ணன் நன்றாக இருப்பதாக சத்தமாக சொல்கிறார். அதை கேட்டு கதிர் நிம்மதி அடைகிறார்.
மறுபக்கம் ஐஸ்வர்யா குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது மீனா வந்து எப்போது எழுந்தாய் என கேட்க இப்போது தான் எழுந்தேன் என சொல்கிறார். பின் எல்லாரும் வருவார்கள் அதனால் தான் வீட்டை சுத்தம் செய்கிறேன் என சொல்கிறார். எல்லாரும் நேற்று முதல் சாப்பிடாமல் இருக்காங்க அதனால் சமைத்து வைப்போம் என சொல்ல மீனாவும் ஐஸ்வர்யாவும் சமைக்க செல்கிறார்கள். பின் ரசம் சமைக்கலாம் என ஐஸ்வர்யா சொல்ல ஆனால் மீனா வேண்டாம் என சொல்கிறார்.
சாப்பிடாமல் மயக்கம் போட்ட ஹேமா,கண்ணம்மாவை காரணம் சொல்லும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
பின் மீனாவை வேலை செய்ய சொல்லிவிட்டு ஐஸ்வர்யா பாண்டியனை பார்க்க செல்கிறார். அதை பார்த்து மீனா கோவப்பட இருவரும் சேர்ந்து சமைக்கலாம் என சொல்கிறார். பின் மருத்துவமனையில் தனம் அவருடைய அம்மாவை கிளம்ப சொல்ல ஆனால் அவர் கிளம்பவில்லை. அப்போது மீனா ஜீவாவிற்கு போன் செய்து பாண்டியன் அழுது கொண்டே இருப்பதாக சொல்ல அவனை சமாளிக்க முடியவில்லை என சொல்கிறார். தனம் போனை வாங்கி பேச பாண்டியன் அழுகிறான் என சொல்ல நான் வீட்டிற்கு கிளம்புகிறேன் என தனம் கிளம்புகிறார்.
கண்ணனும் தனத்தின் அம்மாவும் இருக்க தனமும் ஜீவாவும் கிளம்புகின்றனர். அப்போது கதிரும் முல்லையும் இருக்க அவர்களிடம் எதுவும் பேசாமல் தனம் கிளம்புகிறார். முல்லை பேச வர ஆனால் தனம் பதில் சொல்லவில்லை. தனம் கிளம்பி விட கதிர் முல்லையை வீட்டிற்கு போக சொல்கிறார். நீங்க வராமல் நான் போகமாட்டேன் என முல்லை சொல்ல அண்ணன் கண் விழித்து பேசும் வரை நான் போக மாட்டேன் என கதிர் சொல்கிறார். இங்கே இருந்தால் யாரும் பேசமாட்டார்கள் என சொல்லி கூட கதிர் வரமாட்டேன் என சொல்கிறார்.