NEET தேர்விற்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு – தேர்வாணையம் அறிவிப்பு!
தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2022-23 ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு ஜூலை 17-ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு:
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை வழங்க தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுதோறும் நீட் நுழைவு தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படும். 2022-23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு ஜூலை 17-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
நீட் தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் இந்த விண்ணப்பங்களை செலுத்த மே 6 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின் மே 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்றாவது முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன் படி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20ஆம் தேதி இரவு 9 மணி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 20 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் மேலும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பெரும் வசதியாக இருக்கிறது. அதன்படி இத்தேர்வுக்கு www.neet.nta.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.