இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – சிறப்பு சேவை அறிமுகம்!
வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது பல்வேறு திட்டங்களை இந்தியன் வங்கி வழங்கி வருகிறது. தற்போது வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் வங்கி சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கி:
கொரோனா தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. வணிகங்கள் முதலியன பாதிக்கப்பட்ட நிலையில் வங்கிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதை சமன் செய்ய தற்போது புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. தற்போது அனைவரும் வீட்டில் முடங்கி கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளதால் தனது சேவையை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்க முடிவு செய்துள்ளது இந்தியன் வங்கி.
TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
எனவே தற்போது வாடிக்கையாளர்களிடம் பணம் இல்லை என்றாலோ, பணம் எடுப்பது, பணம் டெபாசிட் செய்வது போன்ற தேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் வங்கியில் கிளை அல்லது ATM செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் தனது சேவை வழங்கப்படும் என இந்தியன் வங்கி கூறியுள்ளது. இது குறித்த அறிவிப்பு ஒன்றை இந்தியன் வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.
ரூ.40 ஆயிரம் வரை ஊதியத்தில் அரசு சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு – நாளை கடைசி நாள்!
அதன்படி, இந்த சேவையை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பது கட்டாயமாகும். பின் வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள வங்கியில் இந்த சேவைக்காக பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு தகுதியுடைய வாடிக்கையாளர்கள் 18001213721 என்னும் இலவச எண்ணை தொடர்பு கொண்டு சேவையை பெற்றுக் கொள்ளலாம். அல்லது வங்கியின் அதிகாரப்பூர்வ தலமான www.psbdsb.in என்னும் இணையதள முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம். KYC செய்வதன் மூலம் வங்கிக் கணக்கு open செய்வது, பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுதல் மற்றும் டெபாசிட் செய்வது, பணம் எடுப்பது மற்றும் ரீசார்ஜ் செய்வது போன்ற சேவைகள் பெற முடியும்.