Bonafide சர்டிபிகேட் இனி ‘இதற்கு’ தேவையில்லை – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதால், பள்ளிகள் மாணவர்களை Bonafide சர்டிபிகேட் சமர்ப்பிக்க கேட்டிருந்த நிலையில், தற்போது அவை மறுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:
தமிழகத்தில் 2022- 2023ம் கல்வி ஆண்டில் தான் மாணவர்கள் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு முழு பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இதனால் அரையாண்டு தேர்வுக்கு முன்னதாக முழு பாடத் திட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு முடிவுகளுக்கு பின்னர் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வுகள் தொடங்கி விடும்.
தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு – முழு விபரம் உள்ளே!!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், தமிழக பள்ளி பொதுத்தேர்வு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் பள்ளிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக மாணவர்கள் Bonafide சர்டிபிகேட் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இந்த சான்றிதழை வாங்க முற்பட்டதால் பல சிக்கல்கள் எழுந்துள்ளது. இதனால் Bonafide சர்டிபிகேட் கட்டாயமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவை வெளியிட்டுள்ளது.