தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு – முழு விபரம் உள்ளே!!
தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு தேர்வை எழுத விரும்பும் தனித்தேவர்கள் விண்ணப்பிப்பதற்கான அறிவிக்கையை அரசு தேர்வு இயக்குனர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.
தனித்தேர்வர்கள்
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2023) 10,11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வு இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 2023 ஆம் கல்வியாண்டில் 10,11,12 ஆம் வகுப்புக்கான தனித் தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு இயக்க சேவை மையத்தின் வாயிலாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேவர்கள் வருகிற டிசம்பர் 26ம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இதற்கு வருகிற ஜனவரி 5ஆம் தேதி முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு? இன்றைய வானிலை தகவல்!
Exams Daily Mobile App Download
ஆனால் இந்த தக்கல் முறையில் விண்ணப்பிப்பதற்கு கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். அதன்படி 10ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கூடுதல் கட்டணமாகவும் இதே போல், 12ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.1000 கட்டணமாகவும் செலுத்த வேண்டும் என அரசு தேர்வு இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.