நிலக்கரி சுரங்கத்தில் 374 காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.34,391 சம்பளம் || இறுதி வாய்ப்பு!!
Mining Sirdar, Surveyor பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை Northern Coalfield Limited ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.34,391/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நாளை இறுதி நாள் என்பதால் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரம்:
- Northern Coalfield Limited நிறுவனத்தில் சமீபத்தில் வெளியான அறிவிப்பின்படி Mining Sirdar, Surveyor பணிகளுக்கு என மொத்தம் 374 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Mining Sirdar, Surveyor பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 ஆகவும் அதிகபட்சமாக 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Mining Sirdar பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,852.56/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
- Surveyor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.34,391.65/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க Sc/ST/PwBD/ ESM/ Departmental விண்ணப்பதாரர்கள் தவிர மற்ற பிரிவினர்களுக்கு ரூ.1180/-விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Mining Sirdar, Surveyor பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer Based Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NTPC நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் நாளை இறுதி நாளுக்குள் (22.12.2022) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.