தமிழகத்தில் நாளை (அக். 29) தொடங்கும் வடகிழக்கு பருவமழை – 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (அக். 28) முதல் தொடங்க இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து 15 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தொடங்கவில்லை. தென்மேற்கு பருவமழை விலக காலதாமதம் ஏற்பட்டதால் வடகிழக்கு பருவ மழை கால தாமதமாக தொடங்குவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி நாளை (அக். 29) வடகிழக்கு பருவ மழை தொடங்க இருக்கிறது
அதனால் 2 நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது, அதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நாளை பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழைக்கும், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்