தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்தில் அனுமதி இல்லை – பாகிஸ்தான் அறிவிப்பு!
கொரோனா தாக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது.இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
தடுப்பூசி:
கொரோனா தொற்று அதிகமாக இருந்ததன் காரணமாக உலகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தடுப்பூசி போடாதவர்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்க கோரி பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸை தொடர்ந்து டெல்டா வைரஸ் பரவி வருகிறது.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – CEO சுற்றறிக்கை!
தடுப்பூசி போட்டவர்களையே பாதித்து வரும் நிலையில் மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள பாகிஸ்தான் அரசு வலியுறுத்தி வருகிறது. தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 15 முதல் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அக்டோபர் 15 க்குப் பிறகு பள்ளிகளில் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து செப்டம்பர் 30 க்குப் பிறகு விமானப் பயணத்திற்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 31 முதல் தடுப்பூசி போடாதவர்கள் ஷாப்பிங் மால்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் வருகிற செப்டம்பர் 29 வரை ஷாப்பிங் மால்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதன் பிறகு முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும் கூறப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
அதே போல் செப்டம்பர் 30 க்குப் பிறகு முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே திருமண விழாக்களில், ஹோட்டல்களில் அனுமதிக்கப்படுவர்.மேலும் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய ஒரு தவணையாவது தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் மக்களை தடுப்பூசி செலுத்துமாறு பாகிஸ்தான் அரசு வலியுறுத்தி வருகிறது.