தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு கிடையாது? சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிபோகுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த செப்.1ம் தேதி 9 முதல் 12 ம் வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தொடக்க நிலை மாணவர்களுக்கு ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் அவர்களின் கல்வி நிலை மிக கேள்விக்குறியாக இருக்கிறது. எழுத்துக்களை மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அவர்களின் கற்றல் நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை முடிவெடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழகத்தில் அக்.2 & 19 ஆகிய தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல் – அரசு அறிவிப்பு!
இது குறித்து ஆராய்ந்து முதல்வர் மருத்துவ குழுக்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் தொடக்க நிலை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து எதிர்ப்பும் கிளம்புகிறது. கொரோனா முழுமையாக குறையாத நிலையில் பள்ளிகளை திறப்பது கவலை அளிக்கிறது.
பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – கல்வித்துறை அறிவிப்பு!
மேலும் தமிழகத்தில் நாள்தோறும் 600 புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதற்கான முடிவு சரியில்லை என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் 1 முதல் 8 வகுப்பு உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திட்டமிட்டபடி திறப்படுமா? நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.